நவம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் – மாநில அரசு முடிவு!

0
நவம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் - மாநில அரசு முடிவு!
நவம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் - மாநில அரசு முடிவு!
நவம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் – மாநில அரசு முடிவு!

தீபாவளி விடுமுறை நவம்பர் 21 ஆம் தேதியுடன் முடிவதை அடுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று குஜராத் மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

குஜராத் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு 21 நாட்கள் தீபாவளி விடுமுறை அளித்து குஜராத் கல்வி அமைச்சர் ஜிது வகானி உத்தரவிட்டார். இதனால் நவம்பர் 1 முதல் நவம்பர் 21 வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. றிவிப்பு மருத்துவம் மற்றும் மருந்தியல் படிப்புகளைத் தவிர அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து சட்டசபையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பணி நேரம் முடிந்து ஊழியர்களை தொடர்பு கொள்ளும் அலுவலர்களுக்கு அபராதம் – அரசு அதிரடி!

மேலும், கருணை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற குஜராத் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக் நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேரலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கல்வித்துறை தொடர்பான பல முக்கிய முடிவுகளும் சட்டசபையில் எடுக்கப்பட்டது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னதாக அரசு அனுமதி அளித்துள்ளது. COVID-19 பரவுவதைத் தடுக்க பள்ளிகள் கடுமையான நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு விதிகளின்படி, ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாநகராட்சி அறிவிப்பு!

மேலும், குஜராத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் தீபாவளி விடுமுறைக்குப் பிறகு விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்க, மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. “1 முதல் 5ஆம் வகுப்புகளை ஒரே நேரத்தில் திறப்பது குறித்து முடிவெடுக்க நிபுணர்கள் குழு தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மிக விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் ஜிது வகானி அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!