தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்க புதிய வசதி – மின்சார வாரியம் அறிமுகம்!

0
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்க புதிய வசதி - மின்சார வாரியம் அறிமுகம்!
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்க புதிய வசதி - மின்சார வாரியம் அறிமுகம்!
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்க புதிய வசதி – மின்சார வாரியம் அறிமுகம்!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதுவரை மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய வசதி

தமிழக மின்சார துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கு ஜனவரி 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல முறை கால அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில், மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் http://adhar.tnebltd.org/Aadhar/ என்ற இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் மூலம் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் H1B விசா விண்ணப்பம் – மார்ச் 1 முதல் தொடக்கம்!

இன்னும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறதா என சரிபார்க்கும் வசதியை மின் வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதற்கான இணையதளமும் வெளியாகி இருக்கிறது. அதன் படி https://www.tnebltd.gov.in/Billstatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் கைபேசி எண்ணை மின் நுகர்வோர் பதிவிட்டால், அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் என இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!