தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் பதிவு புதுப்பித்தலை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் தங்களது கல்வித் தகுதியினை பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு பதிவை புதுப்பிக்க வேண்டும்.
2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில் 2014 முதல் 2019 வரை உள்ள வருடங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பதிவை புதுப்பித்துக்கொள்ள 3 மாதம் காலஅவகாசம் நீட்டித்து கடந்த டிச.2ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை பெறும் அனைவரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 3 மாதங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதாவது வரும் 2022 மார்ச் 1ம் தேதிக்குள் புதுப்பித்தலை முடித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதனை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்கள் இணையம் வழியாக, நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இணையத்தில் www.tnvelaivaaippu.gov.in என்ற முகவரியின் வழியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.