2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் 10 மடங்கு வீரியம் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு அறிவிப்பு:
கொரோனா வைரஸ் பல்வேறு உருவங்களாக உருமாற்றம் அடைந்து புதிய வகை கொரோனாவாக மாறுகிறது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸான ‘ஒமிக்ரான்’ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை வாய்ந்ததாக உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக் கூடிய 10 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறைகளை அரசு அறிவித்தது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இதனை தொடர்ந்து பெங்களூருவில் ஒமிக்ரான் தொற்று இருவருக்கு கண்டறியப்பட்டது. அந்த இருவரும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இதனால் கர்நாடகா அரசு ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளை அறிவித்தது. அவைகளாவன, கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் வைத்து எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையே இறுதி என தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் – மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!
இந்த பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே விமான பயணிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 4 பேர் உட்பட 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.