தமிழகத்தில் புதிய மின்சார கட்டணம் இன்று (செப்.10) முதல் அமல் – மின்சார வாரியம் அறிவிப்பு !
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டணம் உயர இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
புதிய மின் கட்டணம்:
தமிழகத்தின் பொதுத்துறை அமைப்பான மின்சார வாரியம் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயல்களை செய்து வருகிறது. மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இரவு பகல் பாராமல் ஊழியர்கள் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 12,647 கோடி கடன் வைத்துள்ளது. ஆனாலும் பல ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து புதிய மின்சார கட்டணம் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கேட்டு இருப்பதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தாலும் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று (செப். 10) முதல் தொடக்கம்!
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் எனவும், 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும் எனவும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்கட்டணம் 2026-27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்