தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று (செப். 10) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப். 10) முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நவ. 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். வழக்கமாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் படி சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
நாடு முழுவதும் அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களும் சமம் – யுஜிசி விளக்கம்!
இந்நிலையில் கடந்த வாரம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப். 10) முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்