இனி புதிய கல்விக்கொள்கை அமல் – அரசு அதிரடி உத்தரவு!
உத்திரபிரதேச மாநில பள்ளி கல்வித்துறை ஆனது பள்ளி அட்டவணைகளில் அதிரடி மாற்றங்களை அமல்படுத்த உள்ளது.
அதிரடி மாற்றங்கள்:
உத்திரபிரதேச மாநில அரசு பள்ளி கல்வித்துறையில் புதிதாக பல்வேறு மாற்றங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மாற்றங்களுக்கான புதிய கல்விக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி வாரத்தில் மொத்தம் 29 மணி நேரங்கள் பாடம் கற்பிக்கப்படும். அதில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 முதல் 5:50 மணி நேரம் வரையிலும் வகுப்புகள் இருக்கும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மேலும் பள்ளிகளில் வகுப்புகளுக்கான அதிகபட்ச நேர வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பொது பாடங்களுக்கு அதிகபட்சமாக 45 நிமிடங்கள் மற்றும் முக்கிய பாடங்களுக்கு 50 நிமிடங்கள் வரையில் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் ஆண்டுதோறும் பத்து நாட்கள் மாணவர்கள் புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வருவார்கள் என்றும அந்த நாட்களில் மாணவர்களுக்கு வாய்வழி சோதனைகள் மற்றும் கற்பித்தல்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.