அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் மாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
கர்நாடகாவில் டிசம்பர் மாதம் முதல் மதிய உணவில் ராகி மால்ட்டை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மதிய உணவு
கர்நாடகா அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவுடன் ராகி மால்ட்டை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது மாணவர்களின் உணவில் ஊட்டச்சத்து மதிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு நிதியுதவி, இலவச பேருந்து வசதி.. கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதி – வெளியான அப்டேட்!
மேலும் பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் (டிடிபிஐ), தொகுதிக் கல்வி அலுவலர்கள் (பிஇஓக்கள்), நோடல் அலுவலர்கள் மற்றும் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் தனது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியபின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 3,000 கர்நாடக பொதுப் பள்ளிகள் (கேபிஎஸ்) கட்டம் கட்டமாக மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.