இரவு ஊரடங்கு அமல், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 26 வரை மூடல் – மாநில அரசு உத்தரவு!

0
இரவு ஊரடங்கு அமல், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 26 வரை மூடல் - மாநில அரசு உத்தரவு!
இரவு ஊரடங்கு அமல், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 26 வரை மூடல் - மாநில அரசு உத்தரவு!
இரவு ஊரடங்கு அமல், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 26 வரை மூடல் – மாநில அரசு உத்தரவு!

இந்தியாவில் ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதால் கோவாவில் இரவு ஊரடங்கு மற்றும் மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் ஜனவரி 26ம் தேதி வரை மூடப்படுவதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல்:

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் அளவிற்கு ஓமைக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 1600 பேருக்கு மேல் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பிறந்த 2022ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனுடன் இரவு ஊரடங்குகளும் போடப்பட்டது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – பொங்கல் பரிசு 2022 விநியோகம் துவக்கம்!

தற்போது ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் நலன் கருதி தமிழகத்தில் 1 முதல் 8ம் வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் ஜனவரி 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகள் கொரோனா விதிமுறை கட்டுப்பாட்டுடன் நேற்று முதல் துவங்கப்பட்டது. இந்நிலையில் ஓமைக்ரான் பாதித்த அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வகையில் கோவாவில் ஓமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் இரவு ஊரடங்கு இன்று (ஜன 4) முதல் அமல்படுத்த உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 29ம் தேதியிலிருந்து கோவாவில் , திரையரங்குகள், ஸ்டார் ஹோட்டல்கள், அரங்கங்கள், மற்ற பொழுதுபோக்கு பூங்காக்கள் , பார்கள் அனைத்தும் 50% எண்ணிக்கையில் தான் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஓமைக்ரான் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதன் நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஜனவரி 26ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பதன் மூலம் ஓமைக்ரான் பரவலை தடுக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!