தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!

0
தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!
தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!
தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமல்? சென்னை மாநகராட்சி ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

உலகளவில் சுமார் 90 நாடுகளை ஆக்கிரமித்துள்ள ஒமிக்ரான் மாறுபாடு வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இருவருக்கு இவ்வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு இப்பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அமைச்சர் விளக்கம்!

இந்த செய்தியானது தமிழக மக்கள் மத்தியில் மீண்டுமாக அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகின்ற டிச.31ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ள அரசாங்கம் புத்தாண்டு பண்டிகையின் போது கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் புத்தாண்டு பண்டிகையின் போது இவ்வகை இடங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடும் என்பதால் அதற்குரிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

இப்போது, நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இது 3ம் அலையாக உருவாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 வருடங்களை போல, இந்த ஆண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!