தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – போராட்ட வழக்குகள் ரத்து!
மேலும் அந்த நபருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஏற்கனவே மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. அதாவது முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
ஆனாலும் பேருந்துகள், மீன் அங்காடிகள், காய்கறி அங்காடி போன்ற இடங்களில் பலர் முகக்கவசம் அணியாமல் இருப்பது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. எனினும் தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.