டிச.20 முதல் ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் தற்போதுள்ள கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
விடுமுறை அறிவிப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2ம் அலைத்தொற்று சூழல் ஓய்ந்திருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டுமாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் பரவலும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் பள்ளிகளில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது.
ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் திடீர் அறிவிப்பு!
இப்போது கொரோனா 2ம் அலைத்தொற்றுக்கு மத்தியில், சண்டிகர் யூனியன் பிரதேச அரசு பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன் படி, சண்டிகர் கல்வி அலுவலகம் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி, ‘திருத்தப்பட்ட அட்டவணையின்படி, டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறைகள் இருக்கும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் 3% DA உயர்வு! அரசு அதிரடி!
பள்ளிகள் ஜனவரி 10 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குளிர்கால விடுமுறைகள் பண்டிகை காலங்களில் வருவதாலும், விடுமுறையானது வழக்கத்தை விட முன் கூட்டியே விடப்படுவதாலும் மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்புகளை பெற்றுள்ளது. இப்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.