ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் – நகர நிர்வாகம் உத்தரவு!
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகி வந்த காரணத்தால் முன்னதாக கடுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்:
சீனாவின் ஷாங்காயில் மிகவும் மோசமான அளவில் கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகி வந்தது. இந்த நிலை மிகவும் இக்கட்டாக மாறியுள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கான கூடுதல் திட்டங்களை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக மக்கள் சற்று இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
TNPSC Group 2, 2A தேர்வுகள் தள்ளிவைப்பு? தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்!
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் முதல் முறையாக மளிகைப் பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 25 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரத்தில் ஐந்தாவது நாளாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருந்து புதிய தொற்று பதிவு செய்யவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் 40 நிமிடங்களுக்கு கடைக்குச் சென்று 500 யுவான் வரை செலவழிப்பதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் கடைக்கு நடந்து செல்லவோ அல்லது சைக்கிளில் செல்லவோ அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கடையின் நுழைவாயிலில் இரண்டு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
Exams Daily Mobile App Download
மேலும், நகரின் 18 மெட்ரோ வழித்தடங்களில் நான்கில் ஞாயிற்றுக்கிழமை முதல் ரயில்கள் செயல்படத் தொடங்கும். ஷாங்காயில் 800க்கும் குறைவான புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் பெய்ஜிங் நகரம் முழுவதும் பணிநிறுத்தத்தை விதிக்கவில்லை, மே 18 க்கு 55 புதிய வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.