TNPSC Group 2, 2A தேர்வுகள் தள்ளிவைப்பு? தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்!
தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கான தேர்வு நாளை மறுநாள் (21ம் தேதி) நடைபெற உள்ளது. இத்தேர்வு குறித்து முக்கிய தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் இருக்கின்ற காரணத்தால் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11 லட்சத்து 78,175 தேர்வர்களுமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து விடுங்கள் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி:
தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் இம்மாதம் திட்டமிட்டபடி 21ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது, நாளை மறுநாள் 21ம் தேதி (சனிக்கிழமை) திட்டமிட்டப்படி குரூப் 2 தேர்வு நடைபெறும். சென்ற ஆண்டுகளை விட கூடுதலாக 2 லட்சம் தேர்வர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.
அதாவது 11,78,175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். 4, 96,247 ஆண்கள், 6, 81,880 பெண்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 44 பேர், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் பொது தமிழ் என்ற பாடத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு 38 மாவட்டங்களில் 117 மையங்களில் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Exams Daily Mobile App Download
அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.