இன்று முதல் முடிவுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி நடவடிக்கை!
கடந்த இரண்டு மாத கால கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் தற்போது குறைந்திருப்பதால் இன்று (ஜூன் 1) முதல் புதிய தளர்வுகளை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு:
கொரோனா நோய் தொற்று உருவான கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சீனாவில் புதிய பாதிப்புகள் சமீபத்தில் உச்சம் தொட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்ட சீன அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் சீனாவின் தொழில்துறை நகரமான ஷாங்காயில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக அமலில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இப்போது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட நகர நிர்வாகம் இன்று (ஜூன்.1) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – 11வது தவணைத்தொகை சரிபார்ப்பது எப்படி?
அந்த வகையில் ஷாங்காயில் இன்று முதல் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மீண்டுமாக செயல்பட துவங்கி இருக்கிறது. இப்போது ஷாங்காய் நகரத்தில் பள்ளிகள் தன்னார்வ அடிப்படையில் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஷாப்பிங் மால்கள், பல்பொருள் அங்காடிகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் மருந்துக் கடைகள் ஆகியவை மொத்த திறனில் 75%க்கு மேல் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரையரங்குகள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்போது ஷாங்காயில் கொரோனா தொற்றுநோய் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் முழு ஊரடங்கின் போது நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தொழிலாளர்கள் அகற்றி உள்ளனர். இதனால் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் தெருக்களில் சுற்றி திரிய முடிந்தது. இருப்பினும் சுமார் 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரத்தில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஷாங்காயில் 190,000 பேர் இன்னும் பூட்டப்பட்ட பகுதிகளில் உள்ளனர். இதில் 450,000 பேர் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஷாங்காய் நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 20,000க்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்புகளில் இது நிலையான சரிவாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கின் சில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று (மே 31) முதல் தளர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெய்ஜிங்கில் நேற்று ஒரே நாளில் 18 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.