1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை அசெம்பிளி, விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டு, சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்
அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் காலை அசெம்பிளி, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கல்வி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஜார்க்கண்டில் உள்ள பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த உத்தரவில், அருகிலுள்ள சுகாதார மையங்களுடன் ஒருங்கிணைந்து பள்ளிகள் அனைத்தும் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் கடந்த 15 நாட்களாக கொரோனா நோய்தொற்று விகிதம் அதிகரித்து வருவது ஜார்கண்ட் மாநிலத்திலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய சூழலில், அரசு நடத்தும் பள்ளிகளில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்முயற்சிகளையும் முன்னுரிமை மட்டத்தில் உறுதி செய்வது கட்டாயம் என்று ஜார்கண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது, பள்ளிகள், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவற்றை 1 சதவீத சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலைக் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் முகக்கவசங்களை அணிந்து, சமூக விலகல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் இரட்டை டோஸை போடுவதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.