அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று – மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு! பொதுமக்கள் அச்சம்!
உலகில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் அதன் புதிய உருவமான ஓமைக்ரான் தொற்று தற்போது பரவி வருகிறது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு:
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிற நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை விட அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்றுக்கு பரவும் ஆற்றல் அதிகம் என்று அனைத்து நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தன. இவ்வாறு புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்றால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Online மூலம் Branch மாற்றுவது எப்படி? எளிய வழிமுறை இதோ!
நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் தாக்கம் அதிகமாகி வருகிறது. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலியாகும் எண்ணிக்கை கூடி வருவதால் நெதர்லாந்து அரசு அந்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது. இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே நாளில் 72,832 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு டிச.24ம் தேதி விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று அந்நாட்டு மக்களிடையே பேசப்பட்டு வந்தது. பிரான்ஸ் நாட்டில் தற்போது முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகரித்து வருகிறது என்றும் பிரான்ஸ் அரசின் செய்தியாளர் கேப்ரியல் அட்டல் கூறினார்.