மாநில அரசு ஊழியர்களுக்கு டிச.24ம் தேதி விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
சண்டிகரில் நடைபெற இருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலையொட்டி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ள ஹரியானா அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 24ம் தேதியன்று குறுகிய விடுப்பு எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் வருகின்ற டிசம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வாக்குப்பதிவு காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைய இருக்கிறது. இப்போது முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலையொட்டி, அதன் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு டிசம்பர் 24 ஆம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் – டிச.27ம் தேதி கடைசி நாள்!
இது தவிர தேர்தலை கருத்தில் கொண்டு, யூனியன் பிரதேச நிர்வாகம் டிசம்பர் 22, 23, 24 மற்றும் டிசம்பர் 27 ஆகிய தேதிகளை வேலை இல்லாத நாட்களாக அறிவித்துள்ளது. இது குறித்து சண்டிகர் யூனியன் பிரதேச செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலை முன்னிட்டு தொழிற்சாலை நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது சண்டிகர் அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஹரியானாவை சேர்ந்த அரசு ஊழியர்கள், சண்டிகரில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். அதனால் ஹரியானா அரசு ஊழியர்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்காக டிசம்பர் 24ம் தேதியன்று குறுகிய விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி இருக்கிறது.