இந்துத்துவா அமைப்பினர் கிளப்பிய புதிய சர்ச்சை – 144 தடை உத்தரவு அமல்!
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் மற்றும் ஹலால் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
கர்நாடகாவில் கடந்த சில மாதத்திற்கு முன்பாக முஸ்லீம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரும் போது ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அதனால் முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்களிடைய வாக்குவாதம் நடந்து கலவரங்கள் ஏற்பட்டது. அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இது போன்று ஹலால் பிரச்சனை தொடர்பாகவும் பல்வேறு பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. அதனால் இதனை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது மங்களூரில் உள்ள மாலலி என்ற இடத்தில் கேரள முறைப்படி கட்டப்பட்ட மதானி ஜும்மா மசூதியின் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர். அத்துடன் சில வாரங்களுக்கு மங்களூரு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை.
மேலும் இது தொடர்பாக தொல்லியல் துறை, அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்து பரிஷத் அமைப்பினர், மசூதி உள்ள இடத்தில் கோவில் உள்ள இடமா இல்லையா என்பதைக் கண்டறிய பூசாரி மூலமாக குறி கேட்டு வருகின்றனர். அத்துடன் இதற்காக கேரளாவில் இருந்து கோபால் கிருஷ்ணா என்ற பூசாரியை வரவழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அந்த பகுதிகளில் பதற்ற நிலை நிலவு வருவதால் கலவரங்கள் ஏதும் ஏற்படாதவாறு இருக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.