ரயில் போக்குவரத்தில் புதிய மாற்றங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரயில் போக்குவரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறித்தான முக்கிய விவரங்களை ரயில்வே நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் :
சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25ல் தொடங்கப்பட்ட ரயில் பாதை பராமரிப்பு பணிகள் வருகிற ஆகஸ்ட் 14 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரயில் போக்குவரத்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம் :
- ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ரா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28 ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788),
- திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25 ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ரா விரைவு ரயில் (16787),
- சண்டிகரில் இருந்து ஜூலை 25, 29 ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688),
- மதுரையில் இருந்து ஜூலை 27, 31 ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டிகர் விரைவு ரயில் (12687),
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் நூதன தண்டனை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி
- ஓகாவில் இருந்து ஜூலை 29 ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568),
- தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567),
- கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616),
- மதுரையில் இருந்து ஜூலை 31 ஆகஸ்ட் 7, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (17615),
- தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235),
- மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236),
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ரயில்களும் ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.