தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் நூதன தண்டனை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் நூதன தண்டனை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் நூதன தண்டனை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் நூதன தண்டனை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாணவர்களுக்கான தண்டனை:

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதால் அனைத்து பள்ளிகளும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். இந்நிலையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மாணவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் திட்டம் முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை கடுமையாக தண்டிக்காமல், மற்ற மாணவர்கள் முன் இழிவாக பேசாமல் அவர்களுக்கு சில நூதனமான தண்டனைகள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு

அதாவது பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களின் கற்றல் திறனை ஆராய்ந்து தக்க ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பள்ளி சொத்துக்களுக்கு மாணவர்கள் மூலம் சேதாரம் ஏற்பட்டால் அதனை மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி தர வேண்டும்.
இதை தவிர பஸ்களில் தொங்கியபடி பயணம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங், சாதி-மத அடிப்படையில் பிற மாணவர்களை புண்படுத்துதல், உருவகேலி, போன்ற தவறுகளை மாணவர்கள் செய்யும் போது முதல் தடவை பள்ளியின் ஆலோசகர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் அடுத்தடுத்து அதே தவறை செய்யும் போது சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் செய்யலாம் அவை:

  • 5 திருக்குறளை பொருளுடன் சொல்ல வேண்டும்.
  • 2 நீதிக் கதைகளை சொல்ல வேண்டும்.
  • 5 செய்தி துணுக்குகள் சேகரித்து வகுப்பறையில் வாசிக்க வேண்டும்.
  • 5 வரலாற்று தலைவர்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
  • பள்ளியில் சிறிய காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும்.
  • கடைசியாக மாணவர் அந்த தவறை திருத்திக்கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் மேலும் தவறு செய்ததற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க செய்ய வேண்டும்.
  • இதன் பிறகும் தவறுகள் தொடர்ந்தால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து குழந்தை நேய அதிகாரி மூலம் அறிவுரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!