EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு புதிய மாற்றம் அறிமுகம் – முக்கிய அறிவிப்பு!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்தின் இறுதிக்குள் ஒரு முக்கிய மாற்றம் வர இருக்கிறது. இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் வரும் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
EPFO கணக்கு:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 7 கோடிக்கும் மேலான சந்தாதாரர்களுக்கு இந்த மாதத்தின் இறுதிக்குள் நல்ல செய்தி வர இருப்பதாக EPFO அறிவித்துள்ளது. அதாவது, ஊழியரின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் வர இருப்பதாகவும், இந்த மாற்றத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய ஓய்வூதிய விநியோக முறையை அமைப்பது தொடர்பான கூட்டம் வரும் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்த பிறகு கிட்டத்தட்ட 73 லட்சம் ஓய்வூதியர்களின் கணக்குகளுக்கு ஓய்வூதிய தொகை மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வருங்கால வைப்பு நிதியின் 138 பிராந்திய அலுவலகங்கள் தங்களின் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றம் செய்ய இருக்கின்றனர். தற்போதைக்கு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்கள் மற்றும் நேரங்களில் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த முறையை மாற்றியமைக்க ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கின்றனர்.
IBPS & RRB தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரி தேர்வு
அதாவது, மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் 73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஓய்வூதியம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 138 பிராந்திய அலுவலகங்களின் தரவுத்தளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிராந்திய அலுவலகங்களின் விவரங்கள் அனைத்தும் படிப்படியாக மத்திய தரவுத்தளத்திற்கு மாற்றப்படும் எனவும், இந்த புதிய அறிமுகம் EPFO சேவைகளின் செயல்பாடு மற்றும் விநியோகத்தை எளிதாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.