தமிழகத்தில் அரசு பேருந்து சேவைகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் கிராம புறங்களில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்து:
தமிழகத்தில் திமுக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக 5 வாக்குறுதிகளில் கையெழுத்திட்டு திட்டமாக அமல்படுத்தினார். அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் அமலானது. இது பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இந்த திட்டம் ஒரு எடுத்து காட்டாக விளக்குகிறது.
HCL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தகுதி, பணி உள்ளிட்ட முழு விபரங்கள்!
தற்போது இந்த இலவச பேருந்து திட்டத்தால் தமிழகத்தில் பேருந்துகளில் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் புதிய அரசு பேருந்துகளை வாங்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதில் மாற்று திறனாளர்கள் பயணம் செய்ய கூடிய வகையில் வசதிகள் இருக்கும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தின் போது கிராமப்புற பகுதியில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்திய IT நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாள் வேலை முறைக்கு மாற்றம் – புதிய தகவல்!
இவர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளை விரைவில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளோம். மேலும் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.