இந்திய IT நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாள் வேலை முறைக்கு மாற்றம் – புதிய தகவல்!
இந்தியாவில் மும்பை மாநகரத்தில் செயல்பட்டு வரும் TAC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலைமுறை மாற்றம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TAC செக்யூரிட்டி பார்ச்சூன் நிறுவனம் இதுவரை மேற்கொள்ளாத ஒரு முயற்சியாக, ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 500 நிறுவனங்களை பாதுகாக்கும் பாதிப்பு மேலாண்மையில், உலகளாவிய நிறுவனங்களின் தலைமையாக திகழும் இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாதிப்பு மேலாண்மை ESOF மூலம் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளை நிர்வகிக்கிறது.
Airtel நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் அறிமுகம் – பயனர்கள் மகிழ்ச்சி!
இதற்கிடையில் மும்பையில் செயல்பட்டு வரும் இதன் கிளை அலுவலகத்தில் பணிசெய்து வரும் ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் 4 நாட்கள் என்ற வகையில் புதிய வேலை முறையை மாற்றி, கடந்த 7 மாதங்களாக வெள்ளிக்கிழமைகள் தோறும் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது. இதன் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால் இந்த முறையை தொடரவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தவிர 4 நாட்கள் வேலை முறை தொழிலாளர்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளதால் இந்த கொள்கையை நிரந்தரமாக்குவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 200 ஊழியர்களைக் கொண்ட இந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம், ஊழியர்களின் ஆரோக்கியமான வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதாவது இந்த IT நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட உள் கணக்கெடுப்பில், 80% குழுவினர் வாரத்தில் 4 நாட்கள் நீண்ட நேரம் வேலை செய்யத் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் நீண்ட வார இறுதி நாட்களில் ஊழியர்களின் தனிப்பட்ட கடமைகள் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்நிறுவனம் ஆலோசித்துள்ளது.
அரசு விடுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் அறிவிப்பு!
இது தொடர்பாக TAC பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் த்ரிஷ்நீத் அரோரா கூறுகையில், ‘இந்த முறையின் மூலம் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முதலிடம் கொடுக்கும் போது, இளைஞர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பணிகளில் சமநிலையை எளிதாக்க எங்களால் முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய குறியீட்டின் படி ஊழியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை நேரம் என்ற கணக்கில் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறை வரும் மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.