Post Office அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது வங்கிகளில் பயன்படுத்தப்படும் ஏ.டி.எம் கார்டு போல் அஞ்சல் அலுவலகத்தில் பயன்படுத்தி பணத்தை எடுத்து கொள்வது போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
போஸ்ட் ஆபீஸ் ஏ.டி.எம் கார்டு
வருங்கால சேமிப்பு திட்டங்களுக்கு பொது மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸை நாடுகின்றனர். ஏன்னெனில் வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீஸில் அதிக வட்டி கிடைக்கிறது. அதனால் போஸ்ட் ஆபீஸ் அதிக முதலீடுகளை ஈர்க்கிறது. இதனால் மக்களுக்கு அதிக வட்டியும் அதிக லாபமும் கிடைக்கிறது. இதே போல் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், தேசிய பென்சன் திட்டங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இவ்வாறு போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தொடங்கியவர்கள், தொடங்காதவர்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் ஏ.டி.எம் கார்டு தேவைப்படுவர்கள் www.indiapost.gov.in/VAS/
புதுச்சேரி & காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
போஸ்ட் ஆபீஸில் ஏதாவது சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் E-banking வசதியை பெற விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதேபோல் ஏ.டி.எம் கார்டு அல்லது மொபைல் அல்லது SMS வங்கி சேவை கோரிக்கை படிவத்தை பெற www.indiapost.gov.in/VAS/
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் ஏடிஎம் கார்டு வாங்காதவர்கள் அதற்கான படிவத்தை இதே லிங்க்ல் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த படிவத்தில் கேட்கப்படும் பெயர், வீட்டு முகவரி, அக்கவுண்ட் எண், பான் எண் ஆகியவற்றை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பு 2 அல்லது 3 நாட்களுக்குள் தங்கள் வீடு தேடி ஏ.டி.எம் கார்டு வரும். கார்டு வாங்கிய பிறகு அதற்கு 1 வருடத்திற்கு ஆண்டு கட்டணம் கட்ட தேவையில்லை. இந்த ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இலவசமாக 5 முறை வரை பணம் எடுத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை கார்டில் இருந்து எடுத்து கொள்ளலாம். மேலும் RD அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் அதே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். அத்துடன் “Stop Cheque” கோரிக்கை மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை PPF கணக்குகளில் இருந்து நிதிகளாக பெற முடியும்.