புதுச்சேரி & காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை:
இந்தியாவில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் தொடர் கனமழையால் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையை கடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்தம் நிலவி வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிசம்பர் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம்!
அதே போல் நேற்று பிற்பகல் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை இடைவிடாது பெய்துள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று நவ.26ம் தேதி மற்றும் நாளை நவ.27ம் தேதி என இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.