திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிசம்பர் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம்!
திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை (27.11.2021) காலை 9 மணி அளவில் தொடங்குகிறது. மேலும் திருமலையில் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு குறித்து நாளை மறுநாள் (28.11.2021) அன்று இணையத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
திருப்பதி:
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தீவிரமாக பரவிய கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தினசரி பூஜைகள் கோவில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு ஓரளவு கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறை பணிவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் திருப்பதி திருக்கோயில் முழுவதும் மழை சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. அதனால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் எச்சரித்தது. தற்போது திருமலையில் இயல்பு நிலை திரும்புவதால் மீண்டும் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அடுத்த மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விநியோகம் தொடங்கப்படவுள்ளது. கொரோனா தாக்கம் முழுமையாக குறையாததால் திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 9 மணி முதல் தொடங்கவுள்ளது. மேலும் நேரடி இலவச தரிசன டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான டிசம்பர் மாத அறைகள் ஒதுக்கீடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.