தமிழகத்தில் கடைகள் திறப்பதில் புதிய அறிவிப்புகள் – 800 மெகா வாட் கூடுதல் மின்தேவை!

0
தமிழகத்தில் கடைகள் திறப்பதில் புதிய அறிவிப்புகள் - 800 மெகா வாட் கூடுதல் மின்தேவை!
தமிழகத்தில் கடைகள் திறப்பதில் புதிய அறிவிப்புகள் - 800 மெகா வாட் கூடுதல் மின்தேவை!
தமிழகத்தில் கடைகள் திறப்பதில் புதிய அறிவிப்புகள் – 800 மெகா வாட் கூடுதல் மின்தேவை!

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதால், அதனால் கூடுதல் மின் தேவை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. சுமார் 750 மெகாவாட் முதல் 800 மெகாவாட் வரை அதிகரிக்கும் என மின்வாரியம் மதிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தி:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவைகள் அந்தந்த பகுதியின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு பணி ஒழுங்குமுறை மற்றும் சேவை சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள், உணவகங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைத்தது. ஒரு சில இடங்களில் தேவைக்கேற்ப சில மாறுதல்களும் செய்தனர்.முதல் முதலாக மகாராஷ்டிரா அரசு இச்சட்டத்தை அமல்படுத்தியது.

11 மாவட்டங்களில் ஜூன் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் 2019ம் தொழிலாளர் ஆணையரின் பரிந்துரையை ஏற்று கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த வருடத்துடன் இந்த அனுமதி முடிவடைய உள்ள நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டித்துள்ளது. அதனால் இனி தமிழகத்திற்கு கூடுதல் மின் தேவை அதிகரிக்கும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட்; மற்ற நேரங்களில், 14 ,500 மெகா வாட்டாகவும் உள்ளது.

தினசரி மொத்த மின் தேவையில் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த மின் இணைப்புகளின் பங்கு 5,000 மெகாவாட் வரை உள்ளது. வீடுகளின் பங்கு, 3,000 – 3,500 மெகா வாட் என்ற அளவில் உள்ளது. மேலும் விவசாயத்தின் பங்கு, 2,500 மெகா வாட் முதல், 3,000 மெகா வாட் வரை, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் பங்கு 3,000 மெகா வாட் வரை உள்ளது. இந்த நிலையில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதால் இரவில் மின் தேவை கூடுதலாக, 750 மெகாவாட் முதல், 800 மெகா வாட் வரை அதிகரிக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!