WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – செயலியில் புதிய குரல் அழைப்பு வசதி விரைவில் அறிமுகம்!
முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் தற்போது புதிய குரல் அழைப்பு இடைமுகம் (new voice calling interface coming) என்ற சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
வாட்ஸ் அப்
பிரபலமான செய்தியிடல் மற்றும் தகவல் தொடர்பு தளமான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக கடந்த சில மாதங்களாக பல அம்சங்களையும், புதிய மேம்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய குரல் அழைப்பு இடைமுகம் (new voice calling interface), Metaக்கு சொந்தமான செய்தியிடல் பயன்பாட்டுடன் சில பீட்டா ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அழைப்பு இடைமுகம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை – அதிமுக 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி!
இது தொடர்பாக வாட்ஸ்அப்பை கண்காணிக்கும் வலைதளமான WABetaInfo கூற்றுப்படி, வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் குரல் அழைப்புகளை செய்யும் போது அது புதிய இடைமுகத்தை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய வாட்ஸ்அப் குரல் அழைப்பு இடைமுகம் முன் மற்றும் மையத்தில் வட்ட சாம்பல் சதுரத்துடன் வரும். மேலும் இது பெயர், எண் மற்றும் சுயவிவரப் படம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த வடிவமைப்பு மாற்றத்திற்கான குறிப்புகள் ஏற்கனவே iOS மற்றும் Android பயனர்களுக்கான முந்தைய பீட்டா புதுப்பிப்புகளில் பயன்பாட்டில் உள்ளது.
இதற்கிடையில் வாட்ஸ்அப், அழைப்புகளுக்கு குரல் அலைவடிவங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒரு பயனர்கள் தங்களுடன் யார் பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். இது தவிர வாட்ஸ்அப் செயலி எதிர்கால புதுப்பிப்பில் ‘சமூகம்’ என்ற அம்சத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சமூகம் என்பது ஒரு தனிப்பட்ட இடமாகும். அங்கு குழு நிர்வாகிகள், வாட்ஸ்அப்பின் சில குழுக்களின் மீது அதிக கட்டுப்பாட்டை கொண்டிருப்பார்கள். என்றாலும் வாட்ஸ்அப் சமூகம் ஒரு குழு அரட்டை போன்றது என்றும் குழு நிர்வாகிகள் சமூகத்தில் உள்ள மற்ற குழுக்களை இணைக்க முடியும் என்றும் அறிக்கை கூறுகிறது.