சென்னை: 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை – அதிமுக 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி!
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில் 3 மணி அளவில் உள்ள நிலவரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் நிலவரம்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து வார்டுகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு மாதிரி!
இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வாக்கு பதிவு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. தமிழகத்தில் 268 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் வாக்குரிமை வாக்குப்பதிவு முடிந்தவுடன் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு அளிக்கப்படும் இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் – தனியார்மயமாக்கல் எதிரொலி!
இதற்கான முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 3 மணி அளவில் உள்ள நிலவரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். சென்னையில் திமுக கூட்டணி 79 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் திண்டுக்கல், கரூர், நெல்லை, சிவகாசி, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களிலும் திமுக முன்னிலையில் உள்ளது. அத்துடன் பெரும்பாலான மாநகராட்சி திமுக வசமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .