பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் – அரசின் சூப்பர் அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் மாணவர்களுக்கான பல்வேறு அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
பள்ளி மாணவர்
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி செல்லும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர் தற்போது பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதாவது, ஒவ்வொரு மாத நான்காவது சனிக்கிழமையின் போதும் மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் வரும்படியாக ‘நோ பேக் டே’ அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த நாளில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலாச்சார நிகழ்ச்சிகள், விவாதங்கள், வினாடி-வினா, பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
PM KISAN திட்ட பயனர்களுக்கு எழுந்த சிக்கல் – 18,000 பேருக்கு உதவித்தொகை கிடையாது.. காரணம் இதுதான்!
மேலும், அனைத்து பள்ளிகளிலும் தினமும் காலை அல்லது மாலை ஐந்து நிமிடம் யோகா மற்றும் தியானம் நடத்துவதை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-24 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 205 வேலை நாட்கள் எனவும், 13 நாட்கள் தசரா விடுமுறை மற்றும் 6 நாட்களுக்கு சங்கராந்தி விடுமுறை எனவும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.