தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – மாற்று திட்டம் ரெடி? நிதியமைச்சர் தகவல்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு வெளியிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி இல்லை. எனவே மாற்று ஏற்பாடு ஒன்றை செயல்படுத்த உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் தகவல்:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை திமுக கட்சி அறிவித்தது. இந்த வகையில் பதவி ஏற்றவுடன் திமுக அரசு முன்னதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தது. இருப்பினும் 3 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டு இருந்தனர். இருப்பினும் தற்போது பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கவில்லை. இதனால் பெண்கள் ஏன் இன்னும் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
இதன் அடிப்படையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது, அதிமுக அரசு கஜானாவை துடைத்துவிட்டு சென்றதால் நிதி நெருக்கடி ஏற்பட்டு விட்டது. இதனால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, எனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு திட்டமாக முதியோர் உதவித் தொகை ரூ.1000 பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை நீக்கிவிட்டு 60 வயதைக் கடந்த யார் விண்ணப்பித்தாலும் உதவித் தொகை வழங்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த அறிவிப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் வெளியாகும் என்று கோட்டை வட்டாரத்தினர் கூறுகின்றனர்.