தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதலில் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதன் பிறகு 2021 நவம்பர் 1ம் தேதி 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வழக்கம் போல பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் பரவிய கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 15 – 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
நாடு முழுவதும் 50 ஆண்டுகளுக்கு பின் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் அதிரடி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 1 – 12 வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. தற்போது 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விரைவாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்து மார்ச் மாதம் முடிவு! முழு விவரம் இதோ!
இந்த நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. அதனால் பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 22 வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.