EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்து மார்ச் மாதம் முடிவு! முழு விவரம் இதோ!
கடந்த ஆண்டு, EPFO வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது தொடர்பான முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
EPFO வட்டி விகிதம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்த நிதியாண்டிற்கான வருங்கால வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அடுத்த மாதம் அறிவிக்கும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது EPFO தொடர்பான உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் EPFO வட்டி விகிதங்கள் குறித்த பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது EPFO வட்டி விகிதங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை விரிவாக காணலாம்.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
EPF என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 இன் கீழ் செயல்பட்டு வரும் ஒரு கட்டாய சேமிப்பு திட்டமாகும். இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டம், 20 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனத்தையும் உள்ளடக்கியது. பொதுவாக, பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு ஒரு ஊழியர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை பங்களிப்பாக செலுத்த வேண்டும். மேலும் ஒரு ஊழியர் செலுத்தும் அதே அளவு தொகையை மாத அடிப்படையில் நிறுவனத்தின் முதலாளியும் செலுத்த வேண்டும்.
இப்போது ஊழியரின் ஓய்வூதியத்தின் முடிவில் அல்லது சேவையின் முடிவின் போது, அந்த EPFO சேமிப்பின் மொத்த தொகையை பணியாளர்கள் பெற்று கொள்ளலாம். இந்நிலையில், EPFO குறித்து முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியம், ஒவ்வொரு ஆண்டும் வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட வேண்டிய வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கிறது. அதன் படி, ஒரு நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதத்தை CBT முடிவு செய்தவுடன், அது ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். தொடர்ந்து நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, EPFO வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை 6 மணிமுதல் இதற்கெல்லாம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
கடந்த ஆண்டு, வைப்புத்தொகைக்கான EPFO வட்டி விகிதங்கள் 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டிற்கான விகிதங்கள் இந்த ஆண்டுக்கான வருமானக் கணிப்புகளைப் பொறுத்து இருக்கும். அந்த வகையில் செப்டம்பர் 2017 முதல் நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் கிட்டத்தட்ட 4.9 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது நடப்பு நிதியாண்டிற்கான EPFO வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது தொடர்பான முடிவு அடுத்த மாதம் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
.