TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான தேதி அடுத்த மாதமும் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர்கள் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருட இறுதியில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் நடப்பாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனை தொடர்ந்து பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் போட்டித் தேர்வுகள் காலை 9.30 மணிக்கே தொடங்கபடும். தமிழ் மொழித்தேர்வு நடத்தப்படும் இந்த தேர்வு தொகுத்தேர்வாக அமையும் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். TNPSC நிரந்தர கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் போன்ற பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வருடம் வெளியான TNPSC அறிவிப்பில் 2022 பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் 50 ஆண்டுகளுக்கு பின் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் அதிரடி அறிவிப்பு!
இதனையடுத்து குரூப் 2, 4 தேர்வு குறித்து அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் குரூப் 2, குரூப் 2A தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான தேதி மார்ச் மாதமும் அறிவிக்கப்படும் என்று TNPSC தேர்வாணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும். காலை தேர்வு 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகல் தேர்வு 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.