மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் (IDA) ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களின் (2007) படி, 184.1% அகவிலைப்படி (DA) விகிதம் அதாவது 14% DA தொகை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை கிட்டத்தட்ட 3 மாதங்களாக அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இது தொடர்பான இறுதி முடிவை அறிவிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்களின் துறை, இந்த ஆண்டு ஜனவரியில் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
இதில் வாரிய நிலை மற்றும் அதற்கு கீழ் உள்ள போர்டு நிலைப் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட கட்டணத்தில் DA செலுத்துதல் குறித்த முக்கிய விவரம் இடம்பெற்றிருந்தது. அதாவது, ‘CPSEகளின் வாரிய நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள நிர்வாகிகள், ஒன்றியம் அல்லாத மேற்பார்வையாளர்களுக்கு செலுத்த வேண்டிய DA விகிதங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் படி, 2007 ஊதிய விகிதங்களுக்கு 01.01.2022 முதல் CPSE நிர்வாகிகள் மற்றும் சங்கமற்ற மேற்பார்வையாளர்களுக்கு செலுத்த வேண்டிய DA விகிதம் 184.1% ஆக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் 50 ஆண்டுகளுக்கு பின் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் DPE அலுவலக குறிப்பேடுகளின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் (2007) அனுமதிக்கப்பட்டுள்ள IDA ஊழியர்களுக்கு 184.1% DA விகிதம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள cPSEகளின் கவனத்திற்கு இந்த முடிவை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில், அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி (DA) குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.