தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய எச்சரிக்கை – முதல்வர் அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள புதிய எச்சரிக்கையால் எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது விடுத்துள்ள அறிவிப்பு முரண்பாடானது என்றும் ஆசிரியர்கள் விமர்சித்து வருகின்றனர்.
புதிய எச்சரிக்கை
தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் மொபைல் போன் வாயிலாக தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடையை மீறி மொபைல் போன் உபயோகப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 29 ஆம் தேதி வரை கனமழைக்கு வெளுத்து வாங்கும் – ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை!
பள்ளிக்கல்வவித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது பள்ளிகளில் ஆசியர்கள் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவிட்டு வருகின்றனர். அதே போல பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்களின் வருகையை பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை மொபைல் போனுக்கு தடை விதித்துள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும் தினசரி வருகைப்பதிவை, தினமும் வகுப்பறையில் இருந்தபடி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இத்தகைய பணியை மேற்கொள்ள வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போனை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பது, முரண்பாடாக உள்ளது என்று பள்ளி ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். இதில் எதனை பின்பற்ற வேண்டும் என்று தெரியாமலும் திண்டாடி வருகின்றனர்.