ஜூலை 29 ஆம் தேதி வரை கனமழைக்கு வெளுத்து வாங்கும் – ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை!
இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்தியாவில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல மாநிலங்களில் அதி கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட காரணமாக அமைகிறது. அதிலும், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடந்த மாதம் முழுக்கவே பரவலாக மழை பெய்தது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு அருகில் புயல் ஒன்று உருவாகியுள்ளதால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரமான கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டுமே கிழக்கு ராஜஸ்தானில் 50-80 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
தமிழக பள்ளி மாணவிகள் கவனத்திற்கு – முதல்வரின் வேண்டுகோள்!
மேலும், இன்று பாகிஸ்தான் கடற்கரைக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாகும் புயல் காரணமாக இன்று முதல் குஜராத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று மாநிலங்களின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் எனவும், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகளில் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரைக்கும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில்ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்ச், வல்சாத் மற்றும் படான் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல பிகானேர், உதய்பூர், துங்கர்பூர் மற்றும் ஜலாவர் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் உள்ள சபர்வாடா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.