ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!
15, 30, 60, 90 மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏர்டெல் திட்டம்:
ஊரடங்கு உத்தரவினை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் சமீபத்தில் 15, 30, 60, 90 மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய திட்டங்களை அறிவித்து இருந்தது. ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு 30 மற்றும் 60 நாட்களுக்கான திட்டங்களை வழங்குகின்றது. மேலும் அனைத்து திட்டங்களையும் ஒப்பிடும்போது, ஏர்டெல்லின் 30 நாள் திட்டம் இந்த மூன்றில் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது.
தபால் சேமிப்பு திட்டத்தில் 7.1% வட்டி – விரிவான விளக்கம் இதோ!
ஏர்டெல் 30 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இதே போன்று தங்களது பயனர்களுக்கு இந்த திட்டங்களை வழங்கியதால் இவர்களை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் 30 மற்றும் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் 30 நாள் திட்டத்தின் விலை 299 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயனர்களுக்கு 30 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்து கொள்ளும் வசதியினை வழங்குகிறது. இதனுடன் 30 நாள் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ இலவச சோதனை, இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் ஆகிய பிற அம்சங்களும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஜியோ மற்றும் வோடபோனின் 30 நாள் திட்டங்களுக்கு முறையே 247 மற்றும் 267 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு 25 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். கூடுதலாக, இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன. இதுவும் ஏர்டெல்லின் 30 நாள் திட்டத்தை போன்றது தான். ஆனால் ஏர்டெல் திட்டம் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டாவை கூடுதலாக வழங்குகிறது.