விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு – நாளை துக்க தினமாக அனுசரிக்க நேபாள அரசு முடிவு!!

0
விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு - நாளை துக்க
விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு - நாளை துக்க
விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு – நாளை துக்க தினமாக அனுசரிக்க நேபாள அரசு முடிவு!!

விமான விபத்தில் பலியானவர்களுக்காக நாளை துக்க தினம் அனுசரிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் உட்பட சுமார் 67 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான விபத்து

நேபாளம் நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் சுமார் 67 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 72 பேரில் பயணிகள், விமானி உட்பட சுமார் 67 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கவனத்திற்கு – சென்னையில் இருந்து விமானம் இயக்கம்!!

Follow our Twitter Page for More Latest News Updates

இதில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், எதிர்பாராமல் நடைபெற்ற இந்த கோர விபத்தில் பலியானவர்களை நினைவுகூரும் விதமாக நாளை (ஜனவரி 16) துக்க நாளாக அனுசரிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!