புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கவனத்திற்கு – சென்னையில் இருந்து விமானம் இயக்கம்!!
மெக்கா நகருக்கு புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
விமான இயக்கம்
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மெக்கா நகருக்கு புனிதப்பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு, தமிழக அரசு தரப்பில் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு – ஏராளமான பக்தர்கள் வருகை!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தகவல் அளித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசிய ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு ஆண்டில் ஹஜ் பயணத்திற்கு எந்தவொரு தடையும் இருக்காது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.