நோய் தடுப்பு விதிகள் பின்பற்றுவதில் அலட்சியம் – மத்திய நிபுணர் குழு அறிக்கை!
கேரளாவில் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் உள்ளதே நோய் அதிகரிக்க காரணமாகும் என்று மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிபுணர் குழு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் பல மாநிலங்களில் குறைந்து உள்ளது. அங்கு மாநில அரசுகள் பாதிப்பு குறைவு நிலவரத்தை பொறுத்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாட்டின் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் மின் தகடு மூலம் மின்சக்தி – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
இதனால் மத்திய அரசு மாநில அரசுக்கு அவர்களின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு நிலவரம் குறித்து அறிவதற்காக தேசிய நோய்த்தடுப்பு மைய இயக்குநர் சுஜீத் சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. கோவிட் நிர்வாகத்தில் மாநிலத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த குழு உதவும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த வாரத்திலிருந்து வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், இந்த நிபுணர் குழு செய்த ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இக்குழுவினர் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். அதன்படி, கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதிலும் தொற்று பரிசோதனைகளை செய்வதிலும் அரசு மந்தமாக இருக்கிறது என்றும், தொடர்ந்து மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.