தமிழகத்தில் சட்டப் போராட்டத்தின் மூலம் நீட் தேர்வு விரட்டப்படும் – முதல்வர் முக ஸ்டாலின்!
தமிழகத்தில் நீண்ட காலமாக போராடி வந்த நீட் தேர்வு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலைய பெயர் மாற்றம்? – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இனி தமிழகத்தில் அனைத்து வகையான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படியில் நடத்தப்படும் என்று சட்டமுன் வடிவினை முதல்வெட் முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று மீண்டும் நீட் தேர்வு காரணமாக தமிழக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இதற்காக தனது இரங்கலை தெரிவித்தும், மாணவர்களுக்கும் அறிக்கை ஒன்றினை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
செப்., 21 ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவோம். பல முறையில் நீட் தேர்வு நடப்பது தெரியவந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என்றும், உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என்று தனது அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.