மதுரை விமான நிலைய பெயர் மாற்றம்? – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன், மீனாட்சி என்ற பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மதுரை விமான நிலையம்:
மதுரை விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய விமான நிலையம் ஆகும். இது மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டிற்குத் தனது சேவையை வழங்குகிறது. 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மதுரை விமான நிலையத்திற்கு 2014 ம் ஆண்டு 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. முன்னதாக கொழும்பிற்கு முதலாவது பன்னாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
மக்களின் பிரச்சனைகள் மாவட்ட அளவிலேயே தீர்க்க வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!
2013 முதல் துபாய் விமான நிலையத்திற்கும் மதுரையில் இருந்து விமானங்கள் செல்கிறது. மதுரை விமான நிலையத்திற்கு தேவேந்திரன் அல்லது மீனாட்சி என பெயர் சூட்ட வேண்டும் என்று பல தப்புகளில் இருந்து கோரிக்கை இருந்து வந்த நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.
TN Job “FB Group” Join Now
அவர், நீதிபதிகளிடம் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி தமிழ்நாடு அரசு எந்த பரிந்துரையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இதன்பிறகு நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகளை ஊக்கப்படுத்த முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.