அரசு போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்..!
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) கடந்த சில நாட்களுக்கு முன் Sr. Dy. General Manager பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் இப்போதே தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Dy. General Manager பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் LLB டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். மேலும் Metro Rail களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
விண்ணப்பதாரர்களுக்கு 55 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 27.01.2022 அன்றைய நாளின் படி 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் shortlisted செய்யப்பட்டு, அதன் பின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
NCRTC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வழியாக ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 10.02.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளவும்.