NCERT மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.29,000 சம்பளத்துடன் வேலை – நேர்காணல் மட்டுமே..!
வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனம் (NCERT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Engineer Gr. II & Producer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | North East Regional Institute Of Education (NCERT) |
பணியின் பெயர் | Engineer Gr. II & Producer |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NCERT காலிப்பணியிடங்கள்:
வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனத்தில் Engineer Gr. II & Producer பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
NCERT கல்வித் தகுதி:
Engineer Gr. II பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Physics பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும். மேலும் sound recording மற்றும் sound Engineering பாடப்பிரிவை படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Producer Grade-ll பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.
NCERT வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
NCERT ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.29,000/- ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
NCERT தேர்வு முறை:
இப்பணிக்கு நேர்காணல் (interview) மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் 02.06.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
NCERT விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து சரியாக நேர்காணல் நடைபெறும் பொது கொண்டு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.