இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள தேசிய சேமிப்பு திட்டம் பற்றிய முழு விவரங்களையும், அதற்கான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
இந்தியாவில் தேசிய சேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் அவை பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் தபால் அலுவலக தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) திட்டம் அரசாங்க ஆதரவுடன் கூடிய சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி விகிதத்தையும், மாத வருமானத்தையும் வழங்குகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ 1000 முதல் ஒற்றை கணக்கில் அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரையும், கூட்டு கணக்கில் ரூ. 15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒரு வைப்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம், அதிகபட்சத் தொகையின் உச்சவரம்புக்கு உட்பட்டு, இது ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆன பின் முன்னதாகவே கணக்கை மூடலாம். ஆனால் மூன்று ஆண்டுகள் முடிவடைவதற்குள் வாங்கினால் வைப்பு தொகையில் 2% கழிக்கப்படும். மேலும் இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
ஊழியர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த திட்டத்தில் 18 வயது நிரம்பியவர் சேரலாம். கூட்டு கணக்கை 3 பெரியவர்கள் வரை தொடங்கலாம். அது மட்டுமில்லாமல் மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர் தொடங்கினால், அவருக்கு ஒரு பாதுகாவலர் அவசியம் ஆகும். மேலும் இந்த கணக்கை கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவுடன், சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பாஸ் புத்தகத்துடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை மூடலாம்.