ஊழியர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இலவச காப்பீடு திட்டம்:
ஊழியர்களின் சுகாதாரத் திட்டத்தின் (EHS) கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து கழிக்கப்படும்.
தமிழகத்தில் அக்.13ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
தெலுங்கானா அரசும் ஒவ்வொரு மாதமும் அறக்கட்டளைக்கு சமமான பங்களிப்பை வழங்கும். இதன் மூலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இலவசமாக மருத்துவக் காப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இனி வரும் நாட்களில் தெலுங்கானா அரசே ஊழியர்களின் சுகாதாரத் திட்டத்திற்கென CEO ஆக ஒருவரை நியமிக்கும் எனவும், புதிய பணியாளர்களின் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.