ஜீ தமிழுக்கு செல்லும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை வைஷ்ணவி – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிகர் செந்திலுக்கு தங்கையாக நடித்து வரும் வைஷ்ணவி ஒரு புதிய சீரியல் மூலம் ஜீ தமிழ் டிவியில் நடிகையாக பிரவேசம் கொடுத்திருக்கிறார்.
நடிகை வைஷ்ணவி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘மலர்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வைஷ்ணவி. இந்த தொடரில் நடிகைக்கு தங்கையாக நடித்திருந்த இவருக்கு ஒரு முக்கிய அடையாளத்தை பெற்றுத் தந்தது விஜய் டிவியின் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற சீரியல் தான். இந்த சீரியலுக்கு பின்பாக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் வைஷ்ணவி.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் சரவணன், ஸ்ரேயாவிற்கு திருமணம் எப்போது? அவரே சொன்ன பதில்!
இப்படி தொடர்ச்சியாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த வைஷ்ணவி சமீபத்தில் சினிமாவிலும் தலைகாட்ட துவங்கியுள்ளார். அந்த வகையில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் இவர். இப்படி இருக்க தற்போது ‘பேரன்பு’ என்கிற புதிய சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் வைஷ்ணவி. அதாவது ஜீ தமிழ் டிவியில் தயாரிக்கப்பட்டு வரும் ‘பேரன்பு’ என்ற சீரியலில் லீட் ரோலில் இவர் நடிக்க இருக்கிறார்.
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக ‘பூவே பூச்சூடவா’ மற்றும் ‘ராஜா மகள்’ போன்ற ஜீ தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் நடிக்க இருக்கிறாராம். இப்போது புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ‘பேரன்பு’ சீரியலில் நடிகர் ரியாஸ் மற்றும் வைஷ்ணவியுடன் இணைந்து ‘செம்பருத்தி’ நடிகை லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இந்த புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.