அம்மாவை பற்றி குறை கூறும் மாயன், கொந்தளிக்கும் மாறன் – இன்றைய எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாறன் மற்றும் மாயன் இருவர் தங்களது கடந்த கால வாழ்க்கையினை பற்றி பேசுகின்றனர். பின்னர், மாறன் ராஜரத்தினத்தின் பாதி சொத்துக்களுக்கு உரிமையுள்ளவர் என்று அனைவர்க்கும் தெரிய வருகிறது.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல்
இன்று “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் மாறன் மற்றும் மாயன் இருவரும் தங்களது சிறு வயது ஞாபகங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பின்னர், வடிவு, சிதம்பரன் மற்றும் மாசாணி மூவரும் தங்களது வக்கீலை வரவழைத்து சொத்துக்கள் குறித்த விவரங்களை பற்றி கேட்கின்றனர். முதலில், மாயனின் 45 சதவீத சொத்து மற்றும் நாச்சியாரின் 45 சதவீத சொத்துக்கள் அனைத்தும் தங்களது கிடைத்து விட்டது என்றும் அதனால் நாங்கள் சொல்லுவதை தான் மாறன் மற்றும் சாரதா இருவரும் கேட்க வேண்டும் என்று வடிவு கூறுகிறார்.
“பாரதி கண்ணம்மா” வளைகாப்பு வீடியோ – Reel VS Real மம்மி!
பின்னர், வக்கீல் ராஜரத்தினம் சிக்கலான ஒரு விஷயத்தினை சொத்து உயிலில் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதாவது மாயனுக்கு என்று எழுதி வைக்கப்பட்டுள்ள 45 சதவீத சொத்துக்கள் அவருக்கு சொந்தமாக இருப்பினும் அவர் அதனை யாருக்கேனும் கொடுக்க நினைத்தால் அது மாறனின் பெயருக்கு மாறி விடும் என்று கூறுகிறார். அதனால் தற்போது மாறனுக்கு 45 சதவீதம் மற்றும் அவரது 10 சதவீத சொத்துக்கள் என்று மொத்தமாக 55 சதவீத சொத்துக்கள் அவருக்கு தான் சொந்தம் என்று கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனை அறிந்து வடிவு, சிதம்பரம் மற்றும் மாசாணி மூவரும் அதிர்ந்து விடுகின்றனர். இதனை கேட்டு சந்தோசப்படும் மாறன் இனி அனைவரும் தனது பேச்சினை கேட்க வேண்டும் என்று கூறுகிறார். பின்னர், மாறன் மற்றும் மாயன் இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது தனது அம்மா இத்தனை வருடங்கள் தான் பட்ட வேதனைகளை பற்றி கூறுகிறார். இதனை கேட்டு கொந்தளிக்கும் மாயன் தானும் கஷ்டங்கள் அனுபவித்து இருப்பதாக கூறுகிறார். அம்மா இருந்தும் இல்லாத நிலை தனக்கு மட்டுமே இருந்துள்ளது என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!